வவுனியா ஒமந்தையில் வாகனத்தினை துரத்திச் சென்ற பொலிஸார் : ஏழு முதிரைக் குற்றிகள் மீட்பு!!

406

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 7.30 மணியளவில் கண்டர் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை ஒமந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஒமந்தையிலிருந்து ஏ9 வீதியூடாக சட்டவிரோதமான முறையில் முதிரைக்குற்றிகளை கன்டர் ரக வாகனத்தில் கொண்டு சென்ற சமயத்தில் குறித்த வாகனத்தினை ஒமந்தையில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர்.

இதன் போது குறித்த கன்டர் ரக வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. வாகனத்தினை பொலிஸார் பின் தொடர்ந்த சமயத்தில் வாகனம் புதியவேலர் சின்னங்குளம் வீதிக்கு திரும்பி அதிவேகமாக சென்றுள்ளது.

இதன் போது கன்டர் ரக வாகனத்திலிருந்து 7 முதிரைக்குற்றிகள் வீதியில் வீழ்ந்துள்ளன. இதன் காரணமாக குறித்த வாகனத்தினை பின் தொடர முடியவில்லையென ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் வீழ்ந்த முதிரைக் குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும் குறித்த வாகனத்தின் இலக்கத்தினை வைத்து வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து செய்வதற்குறிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.