வயோதிபரை வீதியில் கைவிட்டுச் சென்ற நபர்கள் : இலங்கையில் மீண்டுமொரு சம்பவம்!!

355


வாகனம் ஒன்றில் வந்த சிலர் வயோதிபர் ஒருவரை அனுராதபுரம் நகரின் வங்கி இடம் என்ற பகுதியில் உள்ள குறுக்கு வீதியில் கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.



இந்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. கடும் வெயிலில் கிடந்த நபருக்கு நிழல் ஒன்றை ஏற்படுத்திக்கொடுத்த அயல் வாசி ஒருவர், சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த வயோதிப நபர் மாநகர சபையின் அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.



வயோதிபரை நடுத் தெருவில் கைவிட்டுச் சென்ற நபர்களை அடையாளம் காண அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் மட்டக்களப்பில் முதியவர் ஒருவர் நடு வீதியில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.