நடுஇரவில் கணவனால் வீட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்ட மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

355

இந்தியாவில் கணவர் வேறு பெண்ணுடன் ஓடி போன நிலையில், அவர் மனைவி மற்றும் குழந்தை வீட்டிலிருந்து துரத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜலடா கிராமத்தை சேர்ந்த பெண் தனது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வந்தார்.

கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் யாரிடமும் சொல்லாமல் அவருடன் ஓடி போயுள்ளார்.

இதையடுத்து கணவரின் மாமியாரும், மாமனாரும் அவர் மனைவியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அப்பெண்ணையும், அவர் குழந்தையையும் இரக்கமின்றி மாமனாரும், மாமியாரும் வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளனர்.

சாலையில் குழந்தையுடன் அப்பெண் செய்வதறியாது நின்றிருந்த நிலையில் இது குறித்து சிலர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.