இவ்வளவு கோரமாக என் மகள் கொல்லப்பட்டது ஏன் : கதறும் தாய் : மனதை உருக்கும் சம்பவம்!!

542


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் தாய் வனிதா, மகளை இழந்த துக்கம் தாங்காமல் கதறிக் கொண்டிருக்கும் சம்பவம் பார்ப்போரின் மனதை உருக்குகிறது.



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், அதில் ஒருவர் தான் 18 வயதான ஸ்னோலின்.

தனது தாயுடன் போராட்டக்களத்துக்கு சென்றவரே குறித்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.



மீனவ குடும்பத்தை சேர்ந்த ஸ்னோலின், தூத்துக்குடியில் போராட்டம் நடைபெறுவதை பார்த்து, தனது தாயை அழைத்துக் கொண்டு களத்துக்கு சென்றுள்ளார்.



சாப்பிடறது, தூங்குறது மட்டும் தான் வாழ்க்கையாம்மா? நம்மளும் போராடணும் என கூறி தாயை அழைத்துச் சென்றுள்ளார்.


100வது நாள் போராட்டம் பெரிய அளவில் உருவெடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது இருவரும் பிரிந்து விட்டார்களாம். துப்பாக்கி குண்டு சத்தத்தால் பயந்து போன வனிதா, வீடு வந்து சேர்ந்துள்ளார்.


நீண்ட நேரம் ஆகியும் ஸ்னோலின் வீடு திரும்பவில்லை, தொலைக்காட்சியில் பார்த்த போது மகள் இறந்து போனது தெரியவந்ததாம்.

பதறிப்போய் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, பின்மண்டையில் குண்டடிபட்டு வாய் வழியா வெளியே வந்திருந்ததாம், இவ்வளவு கோரமா ஏன் கொல்லணும், ஆலையில் பாதிப்பு இருப்பதால் தானே போராடினோம், இப்படி சுட்டுட்டாங்களே, அந்த ஆலையை மூடினால் தான் என் மகளின் ஆன்மா சாந்தி அடையும் என அனுதினமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.