கணவரை தீர்த்து கட்டியது ஏன் : இளம் மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!

350

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கோண்டா அப்பன்னா (32). இவர் மனைவி நாகமணி (27). அப்பன்னா கடந்த வாரம் தனது தந்தை நூகராஜுவுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அப்பான்னாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்தது.

இதே மதுவை நூகராஜுவும் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் அப்பன்னாவின் மனைவி நாகமணி தனது கள்ளக்காதலன் வரதிகுமார் (22) உடன் சேர்ந்து மதுவில் சயனைடு கலந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் நாகமணி மற்றும் வரதிகுமாரை கைது செய்தனர்.

நாகமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் வரதிகுமாரை சந்திக்க வேண்டும் என நினைத்தால் மது அல்லது உணவில் அப்பன்னா மற்றும் நூகராஜுவுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிடுவேன், இந்நிலையில் எங்கள் கள்ளக்காதல் விவகாரம் அப்பன்னாவுக்கு தெரிந்த நிலையில் கண்டித்தார்.

இதையடுத்து அவரையும் நூகராஜுவையும் கொல்ல முடிவெடுத்து மதுவில் சயனைடை நானும், வரதிகுமாரும் சேர்ந்து கலந்து கொடுத்தோம் என கூறியுள்ளார். பொலிசார் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.