எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட புலம்பெயர்ந்த இளம்பெண் : பரபரப்பான வீடியோ காட்சிகள்!!

542

 

அமெரிக்காவில் வேறு நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த பெண் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி எல்லையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

Guatemalan நாட்டை சேர்ந்த Claudia Patricia Gomez Gonzalez (20) என்ற பெண் டெக்சாஸ் எல்லைக்கு வந்துள்ளார். அப்போது எல்லையில் இருந்த பொலிஸ் அதிகாரி அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வந்தார் என கூறி விசாரித்துள்ளார்.

இதையடுத்து Claudia மற்றும் உடனிருந்த மற்ற மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்.

அப்போது Claudia காவலரை எதோ ஒரு பொருளை கொண்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

பின்னர் அருகிலிருந்த மற்ற காவலர்கள் Claudia-வுக்கு மூச்சு உள்ளதா என சோதித்ததோடு முதலுதவி சுவாச சிகிச்சையளிக்க முயன்றுள்ளார்கள்.

இந்த காட்சியை அந்த பகுதியில் வசித்து வரும் மார்டா மார்டினீஸ் என்ற பெண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது ஏன் அந்த பெண்ணை சுட்டு கொன்றீர்கள் என பொலிசிடம் அவர் கேட்டுள்ளார்.

இதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலரின் பெயர் இன்னும் தெரியாத நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனிடையில் Claudia அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தாலும் புலம்பெயர்பவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என Guatemalan அதிகாரிகள் கூறியுள்ளார்.

இந்நிலையில் Claudia சுட்டு கொல்லப்பட்டதற்கு அவர் உறவினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Claudia-ன் அத்தை டோமிங்க விசிண்டீ கூறுகையில், Claudia பட்டப்படிப்பு முடித்த நிலையில் சொந்த நாட்டில் வேலை கிடைகவில்லை.

வறுமையை சமாளிக்க முடியாத அவர் அமெரிக்காவுக்கு வந்தார். புலம்பெயர வருபவர்களை மிருகங்களை போல நடத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

சக்திவாய்ந்த மற்றும் முன்னேறிய நாடு என்பதால் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என கூறியுள்ளார்.