ஐ லவ் யூ டா : உயிரிழந்த குழந்தையிடம் தாய் பேசிய இறுதி வார்த்தைகள்!!

385

 

பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை வினோத நோயால் உயிரிழந்த நிலையில் அது குறித்த வேதனையை குழந்தையின் தாய் பகிர்ந்துள்ளார்.

பவுல் (34) மற்றும் மெலிசா மெட் (31) தம்பதியின் மகன் வில்லியம் (1). வில்லியமுக்கு சில வாரங்களுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது குழந்தை வில்லியமுக்கு sepsis எனப்படும் சீழ்ப்பிடிப்பு சம்மந்தான நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வில்லியமுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நோய் பாதிப்பு குழந்தைக்கு முற்றிய நிலையில் சமீபத்தில் வீட்டின் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போதே அவன் உயிரிழந்துள்ளான்.

இது குறித்து வில்லியமின் அம்மா மெலிசா கூறுகையில், வில்லியம் உயிரிழந்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.

இரவு தூங்குவதற்கு முன்னர் அவனிடம் குட்நைட் செல்லம், ஐ லவ் யூ என கூறினேன், இது தான் அவனிடம் நான் பேசிய கடைசி வார்த்தை என அப்போது எனக்கு தெரியாது.

காலையில் எழுந்து பார்த்தபோது வில்லியம் சலனமற்ற நிலையில் கிடந்தான், இதையடுத்து மருத்துவரை உடனடியாக அழைத்த நிலையில் அவனை சோதனை செய்த மருத்துவர்கள் வில்லியம் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தார்கள்.

என் வாழ்க்கையில் மிக சோகமான மற்றும் மோசமான நாள் அது தான் என சோகத்துடன் கூறியுள்ளார்.