ஆப்கானிஸ்தானின் வெற்றியால் இலங்கைக்கு வந்த புதிய சோதனை!!

414

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்தமையை இலங்கை ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வருகின்றனர்.

காரணம் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட சில சம்பவங்கள்தான். இதில் முக்கியமாக பங்களாதேஷ் வீரர்களின் பாம்பு நடனம் இலங்கை ரசிகர்களை முற்றுமுழுதாக கோபப்படுத்தியிருந்தது என்றுதான் கூறவேண்டும்.

இந்த கோபத்தின் காரணமாக சுதந்திரக் கிண்ண இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு என்றுமில்லாத அளவிற்கு இலங்கை ரசிகர்கள் ஆதரவளித்தனர். அதுமாத்திரமின்றி பங்களாதேஷ் அணியுடன் எந்த அணி விளையாடினாலும், அந்த அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இம்முறையும் நடைபெற்று வரும் தொடரில் இலங்கை ரசிகர்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆதரவு அளித்து பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றதால், ஐசிசி டி20 தரப்படுத்தலில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதாவது டி20 தரப்படுத்தலில் இலங்கை அணி தற்போது 9வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணி 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணி 85 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் 5 புள்ளிகள் முன்னேற்றத்துடன் 8வது இடத்தில் உள்ளது.

ஐசிசி டி20 தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.