செல்பி எடுத்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதா : வடமாகாண சபையில் கேள்வி!!

265

முல்லைத்தீவு எல்லை கிராமங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டு சிங்கள குடியேற்றங்களை பார்வையிட்ட மாகாணசபை ஒரு சிங்கள குடியேற்றத்தையாவது நிறுத்தியுள்ளதா?

கரைவலை இழுக்கும் சிங்கள மீனவர்களுடன் செல்பி எடுத்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதா? என வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாண சபையின் 124வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

“வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத் தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஆபத்துக்கள் குறித்து கடந்த 4 வருடங்களாக இந்த சபையில் பேசி வருகின்றார்.

இதனால் வடமாகாணசபை 3 தடவைகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டிருக்கின்றது. மேலும் வடக்கில் உள்ள மற்றைய மாவட்டங்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தையும் கொடுத்திருக்கின்றது.

ஆனாலும் நடவடிக்கை எதனையுமே எடுக்கவில்லை. அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவின் எல்லை கிராமங்களுக்கு சூறாவளி பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

இதன் பின்னர் ஒரு சிங்கள குடியேற்றத்தையாவது நிறுத்தினார்களா? தமிழ் மக்களுடைய நிலத்தில் இருந்து கொண்டு சட்டத்திற்கு மாறாக உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுத்துக் கொண்டிருக்கும் சிங்கள மீனவர்களுடன் செல்பி எடுத்தக் கொண்டதுடன் எல்லாமே முடிந்து விட்டதா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும், வள சுரண்டல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வு ஒன்றினை இன்றே எடுங்கள்” எனவும் கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,

“முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாகாணசபை உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து சில தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்.

அதில் வடமாகாணத்தில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துமாறு கேட்டுள்ளதுடன், அதற்காக நியமிக்கப்பட்ட குழு விரைவில் ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும் கேட்டுள்ளோம்.

ஆகவே வடமாகாணசபை தொடர் நடவடிக்கைகளை எடுத்தே வருகின்றது” என்றா