24 கரட் தங்கத்துகள் தூவிய கோழிக்கறியை சாப்பிட குவியும் மக்கள் : எந்த நாட்டில் தெரியுமா?

460


அமெரிக்காவின் உள்ள பார் ஒன்றில் தங்கத்துகள் தூவிய கோழிக் கறியை சாப்பிட மக்கள் குவிந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பார் ஒன்றில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க புதிய யோசனை ஒன்றை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி, பாரில் பரிமாறும் சமைத்த கோழிக்கறியின் மீது 24 கரட் தங்கத்துகள்களை தூவியுள்ளனர்.



இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை வருகை தந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் பார் நிர்வாகம் கூறியுள்ளது.

தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும், வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் தூவப்பட்டு பரிமாறப்படுவதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



கோழிக்கறியை வழக்கமாக நாம் அனைவரும் பொன்னிறமாக பொறித்து உண்ணுவோம். ஆனால் அந்த பாரில் கோழிக்கறி மீது முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, கோழியை தங்க உணவாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர்.



மேலும் 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை 3000 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.