வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் நேற்று (12.06.2018) மாலை 6 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் பணிப்பின் பேரில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோ
நோகராதலிங்கம் தலைமையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியாவில் தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகத்தினருக்குமிடையில் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையை நிலைநாட்டவும் சகோதரத்துவமாக இரண்டு சமூகத்தினரும் செயற்பட வேண்டும் என்ற நோக்குடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெளலவியின் ஆசீர்வாத உரையுடன் ஆரம்பித்து நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது
இந் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வடமாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் ராஜன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் புருஸ், வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரதீபன், வவுனியா இளைஞர் சம்மேளனத்தை சேர்ந்த அமுதராஜ் உட்பட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.