வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்!!

543

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை 3 மணியளவில் வந்தடைந்தது.

தொடர்ந்து இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் சிறப்பு நிகழ்வாக தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஜித்தின் ராஜ் (ஓமேல ஒரு கண்ணு பாடல் புகழ் ), சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜேர்சன் , கலக்கப்போவது யாரு புகழ் தௌபீக், இவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னணி இசைக்குழுவான பிரசாத்தின் ஸ்ருதிலயா இசைக்குழு வழங்கிய மாபெரும் இன்னிசை நிகழ்வும இடம்பெற்றது.

எழும் அதிரடி ஒலி ஒளி மற்றும் கண்கவர் மின்விளக்குகளுடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் எமது இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மிகச்சிறப்பாக செய்தனர்.

தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக வவுனியா வவுனியாநெற் இணையதளக் குழுவினர் ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!(காணொளி)