குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தாய் : ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிக்கொண்டு ஓடிய தந்தை!!

614

மலேசியாவில் ஒரு வயது குழந்தையை தாயே கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் பெல்டா ஜெங்காவில், கடந்த 17-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 8.40 மணிக்கு 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் ஒரு வயது குழந்தையுடன் இருந்துள்ளார்.

அப்போது திடீரென்று தான் வைத்திருந்த குழந்தையின் கழுத்தை அந்த பெண் கத்தியால் அறுத்துள்ளார்.

இதைக் கண்ட குழந்தையின் தந்தை அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக தள்ளிவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரணதண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.