இலங்கை வந்த வெளிநாட்டு சகோதரிகளுக்கு கிடைத்த அதிர்ச்சி!!

261

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டு பெண்களின் பணப்பையை இளைஞர்கள் குழுவொன்று கொள்ளையடித்துள்ளது.

பதுளை, தெமோதர பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தின் ரயில் வீதியில் பயணித்து கொண்டிருந்த இரு வெளிநாட்டு பெண்களின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இரு பெண்களின் பைகளிலும், 56000 ரூபா மற்றும் 820000 ரூபா பணம் மற்றும் கமராக்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டு்ளளது.

சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட கமராவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 20 மற்றும் 21 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த சகோதரிகளின் பைகளே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.