யாழில் வாட்டியெடுத்த புழுதிப்புயல் : பொது மக்கள் பெரும் அவதி!!

429


யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப்புயல் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தற்போது ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



யாழ்ப்பாணம் முழுவதும் தற்போது அதிகளவான காற்று வீசி வருகின்றது. இந்நிலையில் காரைநகர் பகுதியில், நேற்று புழுதிப் புயல் வீசியதாகவும், இதனால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை சேத விபரங்கள் ஏற்பட்டதாக எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.