நண்பி மீது ஏற்பட்ட ஆசை : சீகிரியவில் சீனப் பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு!!

235


சீகிரியவில் தனது நண்பியின் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான சீன நாட்டு பெண்ணை சீகிரிய பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.



சீன நாட்டு பெண்கள் மூவர் சீகிரிய பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் அறை ஒன்றில் தங்கியிருந்தனர். அங்கு பெண்ணொருவரின் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பணமும் 2520 யுவான் பணமும் காணாமல் போயுள்ளதாக ஹோட்டல் முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.

ஹோட்டல் முகாமையாளர் இது தொடர்பில் சீகிரியா பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் குறித்த ஹோட்டலில் சோதனையிட்டுள்ளனர்.



எனினும் அங்கு எவ்வித தகவல்களையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த பெண்கள் அங்கிருந்து வெளியேற ஆயத்தமாகியுள்ளனர். அங்கு திடீரென நண்பியின் பையை சோதனையிட்ட போது அவரது பையில் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது நண்பியிடம் அதிக பணம் இருந்தமையினால் அதனை பார்க்க ஆசையாக இருந்ததாகவும், இதனால் திருடியதாகவும், குறிப்பிட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.