மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் சச்சின் அதுல்கருக்கு இந்தியா முழுவதும் அதிகமான பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.
சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இருக்கும் ரசிகைகள் போன்று, இவருக்கும் அதிகமான ரசிகைகள் இருக்கின்றனர். இதற்கான காரணம் இவரது தோற்றம்.
சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் இவரது புகைப்படம் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
சச்சினின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த பஞ்சாபை சேர்ந்த 27 வயது இளம்பெண், 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று சச்சின் அதுல்கரை பார்த்தே தீருவேன் என அடம்பிடித்தஅந்த பெண்ணை, பொலிசார் ரயில் நிலையத்துக்கு கூட்டிச்சென்று பஞ்சாப்புக்கு ரயில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால், போகும் வழியில் ரயிலில் இருந்து குதித்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டல் விடவே, பொலிசார் மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ்.பி சச்சின் அதுல்கர், பொதுவான விவகாரங்கள் குறித்து என்னை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த பெண் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்கிறார். அது தவறான முறையாகும் என கூறியுள்ளார்.