வவுனியா விக்ஸ்காட்டுப் பகுதியில் காணி தொடர்பில் குழப்பம்!!

392

வவுனியா இராசேந்திரன்குளம் விக்ஸ்காட்டு கிராமத்தில் இன்று அரை ஏக்கர் அடிப்படையில் நாற்பத்தேழு காணித்துண்டுகள் பிரிக்கும் நடவடிக்கையினை கிராமசேவையாளர் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது இவ் செயற்பாட்டினை செய்வதற்கு அப்பிரதேச வாழ் மக்களால் தடையேற்பட்டது. இவ்விடயம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா விக்ஸ் காட்டுப் பகுதியில் காடுகளை அழித்து பல குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் இப்பகுதி காட்டுப்பிரதேசம் என கோரி வனவள திணைக்களத்தினரால் இங்கு வாழ்ந்த மக்களை அகற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த நிலையில் இப்பகுதி வாழ் மக்களினால் மாவட்டச்செயலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்களிற்கிணங்க பிரதேச செயலாளரினால் இவர்களிற்கான காணியினை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில் இப்போராட்டம் கைவிடப்பட்டிருந்து.

இந்நிலையில் இன்று வவுனியா பிரதேச செயலாளரினால் இவ் விக்ஸ் காட்டு கிராமத்தினை அரை ஏக்கர் வீதம் நாற்பத்தேழு துண்டுகளாக பிரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போது இப்பிரதேச மக்களினால் இவ் விக்ஸ் காட்டு காணினை வேறு கிராம மக்களிற்கு வழங்குவதாக கூறி இப்பகுதியினை நில அளவை செய்வதற்கு தடையினை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் அதிகாரி மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர் ஆகியோர் அவ்விடம் சென்று இது தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் இப்பிரச்சனைக்கு தீர்வு கானணும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக கிராம சேவையாளரால் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச செயலாளரினால் அரை ஏக்கர் வீதம் நாற்பத்தேழு காணித்துண்டுகளை மட்டும் நில அளவையினை செய்யப்படுமே தவிர இக்காணியினை யாருக்கு பிரித்து வழங்குவது என்பது தொடர்பில் தாம் தற்போது ஈடுபடவில்லை என கிராம சேவையாளரின் ஊடாக தெரிவித்ததனால் நில அளவை செய்யும் செயற்பாட்டிற்கு மக்கள் தடை ஏற்படுத்தாமல் கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.