பொலிஸ் சீருடை அணிந்த விவகாரம் : புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை!!

338


தொலைக்காட்சி நடிகை நிலானி, பொலிஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இது குறித்து வடபழனி பொலிசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நிலானியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குன்னூரில் இருந்த நிலானியை கைது செய்தனர்.

குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை நேற்று சென்னை வடபழனி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் நிலானியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.



நிலானியை ஜூலை மாதம் 5ம் திகதிவரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகை நிலானியை பொலிசார் புழல் சிறையில் அடைத்தன