தினமும் தொல்லை : அடித்தே கொன்ற பெண் : விசாரணையில் அம்பலம்!!

331


சென்னையில் தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை உறவினர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



வண்ணாரப்பேட்டை மாடர்ன் தெருவில் வசிப்பவர் அருண், இவரது கள்ளக்காதலி ஜோதி. தினமும் குடித்துவிட்டு வரும் அருண், ஜோதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, அருணை கொல்ல திட்டம் தீட்டினார். இதன்படி சம்பவத்தினத்தன்றும் குடிபோதையில் இருந்த அருணை, ஜோதி மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து அடித்துக் கொன்றுள்ளனர்.



இதுதொடர்பான வழக்கில் பொலிசார் விசாரணை நடத்தியதில் உண்மைகள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஐந்து பேரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.