வவுனியாவில் டெங்கு நுளம்பின் பெருக்கம் தீவிரம்!!

317

வவுனியாவில் கடந்த இரண்டு வாரமாக நகரை அண்மித்த பகுதியான கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்ட வீதி போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் அப்பகுதிகளில் டெங்கு நுளம்பு பரிசோதனைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

இன்று அப்பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் பகுதிகளில் பரிசோதனைகளை அதிகாரிகள் நேரில் சென்று மேற்கொண்டு வருகின்றார்கள்.

அப்பகுதி மக்கள் போதியளவில் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து சுகாதாரப்பரிசோதகர்களும் தனியாக பரிசோதனைகளை மேற்கொண்டு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கடந்த இரு வாரங்களில் குறித்த பகுதிகளில் 10ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் தொற்றுக்குட்பட்டுள்ளமை பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.