திருமணத்துக்கு வந்த 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : சிசிடிவியில் பதிவான கலங்க வைக்கும் காட்சிகள்!!

565

 

இந்தியாவில் குவாலியர் எனும் இடத்தில திருமணத்திற்காக வந்த 6 வயது குழந்தையை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அங்குள்ள ஒரு நபர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்ப்ரயோகம் செய்து கொன்ற சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

திருமண கொண்டாட்டங்களில் தனது மகளை காணவில்லை என்பதை தாமதமாக உணர்ந்த பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து சிசிடிவியை ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் காட்சிகள் வெளியாகியதால் பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது பெற்றோருடன் திருமணத்திற்கு வந்திருந்த சிறுமியை ஏதோ காரணம் சொல்லி வெளியே தனியே அழைத்து செல்லும் குற்றவாளி சம்பந்தமான வீடியோ பார்க்கும் அனைவரின் மனதையும் கதிகலங்க செய்கிறது.

அந்த சிசிடிவி காட்சிபடி திருமண கொண்டாட்டங்களுக்கு நடுவே இரவு 11.30 மணிக்கு சம்பந்தப்பட்ட குழந்தை ஒரு நபருடன் வெளியே வருகிறாள்.

யாரோ ஒரு நபருடன் வேகவேகமாக அந்த குழந்தை யாருமற்ற தெருவில் நடக்கிறது. குற்றவாளியும் உடன் நடந்து வருகிறான். சிறிது நேர நடைக்கு பிறகு திடீரென அந்த சிறுமி அவனிடம் இருந்து தப்பி திரும்பி வந்த வழியே ஓடி வருகிறாள்.

ஆனால் அவன் அந்த சிறுமியை அதன்பின் மீண்டும் அழைக்கிறான். எதனாலோ பயப்பட்ட 6 வயது சிறுமி அவன் பின்னாலேயே செல்கிறாள். அதோடு சிசிடிவி காட்சியில் இருள் கவிகிறது. பார்ப்பவர் மனதிலும்.

பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் குற்றவாளி மட்டும் தனியே திரும்பி வருவதான காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

அதன் பின்னர் அந்த சிறுமி அடுத்த நாள் காலை பொலிஸாரின் தேடுதலுக்கு பிறகு திருமணம் நடந்த இடத்திலிருந்து 500மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்க படுகிறாள். சடலமாக.

சம்பவ இடத்தில் சிறுமியின் சடலத்தை பார்த்த உடனேயே இது கொடூரமான முறையில் நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் என தெரிந்ததாக இந்த விசாரணையை மேற்கொண்ட தர்மராஜ் மீனா எனும் மூத்த காவல் துறை அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த குற்றத்தில் திருமண நிகழ்வில் சமைக்க வந்திருந்தவர்களில் ஒருவனை கைது செய்துள்ளது. மேலும் அவனிடம் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்த குற்றத்தை அவன் செய்யும்போது அவனிடம் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக காணப்படுவதால் இதில் மேலும் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிசிடிவி காட்சிகளில் வெளியான மழலை மாறாத அந்த சிறுமியின் காட்சிகள் பல நாட்களுக்கு நம் நெஞ்சிலிருந்து மாறாது.

யாரோ சிலரின் சில நிமிட வக்கிரங்களுக்காக இளம் பிஞ்சுகள் சிதைக்கப்படும் கொடூரம் என்றைக்கு மாறும் என தெரியாமல் மனம் கனக்கிறது.