பிரபலமாகும் ஆசையில் ஈழத்தமிழர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் வீடியோவை வெளியிட்டேன் : நடிகை வாக்குமூலம்!!

310

தொலைக்காட்சி நடிகை நிலானி, பொலிஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வடபழனி பொலிசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நிலானியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னூரில் இருந்த நிலானியை கைது செய்தனர்.

குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை நேற்று சென்னை வடபழனி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் நிலானியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நிலானியை ஜூலை மாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தஞ்சாவூரை சேர்ந்த நான் சிறுவயதிலேயே நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டேன்.

ஆனால், சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. இதனை வைத்து ஜல்லிக்கட்டு போராட்டம் , ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் மற்றும் சில தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்து போராடினேன். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் நான் அதிகம் பேசப்படவில்லை.

இந்நிலையில் தான், தொலைக்காட்சி தொடரில் நடித்துக்கொண்டிருந்தபோது தூத்துக்குடி போராட்டம் குறித்து பொலிஸ் சீருடையில் பேசி வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டேன்.

படவாய்ப்புக்கான விளம்பரமாக இது அமையும் என்று நினைத்தேன். காவல்துறையை பற்றி தவறாக பேசும் எண்ணம் எனக்கு இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.