பேயோட்டுவதாக கூறி பழுக்க காய்ச்சிய இரும்பால் உடலெங்கும் சூடு போட்ட மருத்துவர்!!

322

ராஜஸ்தானில் பேயோட்டுவதாக கூறி ஒரு பெண்ணின் உடலில் பல இடங்களில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு போட்டுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் பாலி பகுதியை சேர்ந்தவர் ஜதா தேவி (25) சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார்.

கூலி தொழிலாளியான அவரது கணவன் ஜெய்ராம் பட் அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்க உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஆகவே உறவினர்கள் ஒன்று கூடி ஜதா தேவிக்கு தீய சக்திகள் தொந்தரவு இருப்பதாக கூறி அவரை மந்திரவாதி மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்றனர்.

அந்த மருத்துவர் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இரும்பால் சூடு போடுவதுதான் மருத்துவம் என்று கூறி ஈவிரக்கம் இல்லாமல் ஜதா தேவியின் உடலெங்கும் நாக்கு உள்பட பல இடங்களில் பழுக்க காய்ச்சிய இரும்பால் இரண்டு நாட்களாக சூடு போட்டிருக்கிறார்.

அதுவரை பேசிக்கொண்டிருந்த ஜதா தேவி இந்த சிகிச்சைக்கு பின் பேச்சையும் இழந்திருக்கிறார். மேலும் உடல் நிலை மோசமாகவே ஜோத்புரில் உள்ள பாங்கார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு இவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் acute psychosis எனும் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர்.

அதன்பின் ஜதா தேவிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். தீ காயங்கள் ஆறி வருகிறது. இவரது மன நோயும் 6 மாதங்களில் சரியாகி விடும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த விடயத்தில் இவரது கணவரை கைது செய்த போலீசார் அவர் சொன்ன தகவலின் பேரில் அந்த மந்திரவாதி மருத்துவரையும் கைது செய்துள்ளனர்.

இன்றைய நவீன யுகத்திலும் ராஜஸ்தானில் சில பகுதிகளில் இது போன்ற பழைய நம்பிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன. சட்டவிரோதமான முறையில் இந்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட மனிதாபிமானம் இல்லாத மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.