பிரித்தானியாவில் கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொல்லப்பட்ட 4 பிள்ளைகளின் தந்தை!!

338

பிரித்தானியாவில் களவு போன தனது பிள்ளைகளின் மிதிவண்டியை தேடிச் சென்ற தந்தை ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் டெல்ஃபோர்ட் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் 42 வயதான Derek Whyteside.

கடந்த திங்களன்று மாலை சுமார் 4.30 மணியளவில் தமது பிள்ளைகளின் களவு போன மிதிவண்டி தொடர்பில் விசாரிக்க சென்றுள்ளார்.

இந்த நிலையில் இளைஞர் கூட்டம் ஒன்று இவரை கிரிக்கெட் மட்டையால கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் அவரை அங்கிருந்த மீட்ட பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கிரிக்கெட் மட்டையால் கண்மூடித்தனமாக அவரது தலையில் தாக்கியதால் தான் அவர் இறந்துள்ளதாக அவரது மனைவி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் முதற் கட்டமாக 6 பேரை கைது செய்துள்ளனர் பின்னர் ஒரு இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை பிணையில் விடுவித்துள்ளனர்.

இதில் 16 வயது இளைஞர் ஒருவரை கொலை குற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.