யாழ். இளைஞர்களுக்கு கிடைத்த அதிஷ்டம் : இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ப்பு!!

493

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு எதிரான போட்டியில் விளையாடும், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோரே 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்கள்.

குறித்த இரண்டு வீரர்களும் வடமாகாண அணி சார்பில் பிரகாசித்த நிலையில், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணிக்கு தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.