வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவின் பாதுகாப்பு கருதி நகரசபையை பொறுப்பேற்குமாறு வேண்டுகோள்!!

443

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று முன்தினம் மாலை இளைஞர்கள் சிலர் மதுபோதையில் அங்கு சென்று பணியாற்றிய ஊழியருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதற்கு அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் நகரசபையின் கீழ் செயற்படும் சிறுவர் பூங்காக்களில் பாதுகாப்பு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறான ஒரு சூழ்நிலையினை ஏற்படுத்தவும் குறித்த சிறுவர் பூங்காவின் நிர்வாகத்தை நகரசபையின் கீழ் கொண்டு வந்து பாதுகாப்பான சூழ்நிலையில் சிறுவர்கள் விளையாட்டு, பொழுதுபோக்கைக்கழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, நேற்று முன்தினம் மாலைவேளையில் சிறுவர்களை பூங்காவிற்கு அழைத்துச் சென்றபோது இளைஞர்கள் சிலர் மதுபோதையில் அங்கு சென்று கடமையிலிருந்த ஊழியர் ஒருவரின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் குளப்பகரமான நிலையை ஏற்படுத்திய செயற்பாடுகளினால் சிறுவர்கள் சிலர் அச்ச நிலையில் உள்ளதாகவும்,

இவ்வாறு சிறுவர்கள் பூங்காவிற்குள் இளைஞர்களை மதுபோதையில் அனுமதிப்பதற்கு தடைவிதிப்பதுடன் நகரசபையின் கீழ் செயற்படும் சிறுவர் பூங்காவிற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு அவ்வாறனவர்கள் நியமிக்கப்படவில்லை எனவே சிறுவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் பொழுதுபோக்கினை மேற்கொள்ள நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் அல்லது ஏனைய சிறுவர் பூங்காவினைப்போல நகரசபையினர் குறித்த பூங்காவினை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பான சூழ்நிலையினை ஏற்படுத்தும் பட்சத்தில் சிறுவர்கைள பூங்காவிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனினும் குடியிருப்பு சிறுவர் பூங்காவானது குடியிருப்பு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது.