இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து : வெளிநாட்டு தாய் மற்றும் மகள் பலி!!

419

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலியர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 2 அவுஸ்திரேலிய நாட்டவர்கள் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்தனர்.

Louise Collins என்ற பெண் மற்றும் அவரது மகளான 4 வயதுடைய Poppy என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவர் மற்றும் குடும்பத்தினர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். கடந்த புதன்கிழமை நாகொட பிரதேசத்தில் இவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Louise என்பவரின் கணவர் Patrick மற்றும் அவர்களது மகன் Fred மற்றும் மகள் Poppy ஆகியோர் பயணித்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Patrick மற்றும் மகன் Fred ஆகியோர் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் மகள் மற்றும் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மகன் Fredஇன் முகத்தில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தந்தை ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Patrick மத்திய கிழக்கு நாடுகளின் விமான சேவையான கட்டார் எயார்வேஸ் விமான சேவையில் பிரபல விமானியாக செயற்பட்டு வருகின்றார்.

மிகவும் அன்பான ஒரு குடும்பத்தை இழந்து விட்டோம் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.