காணாமல் போன குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

527

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த Dominic Peakeஇன் மகன் Princeton Peake (2) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானான்.

வீட்டிற்கு அருகில் மரங்களும் சதுப்பு நிலமும் நிறைந்த காடு. குழந்தையைக் காணவில்லை என்றதும் உயிர் துடிக்க ஓடிய Dominic Peakeகிற்கு குழந்தையின் தண்ணீர் குடிக்கும் கப் மட்டுமே கிடைக்க, துவண்டு போனார் அவர்.

தன் குழந்தை சதுப்பு நிலத்தில் எங்காவது முகங்குப்புற விழுந்து கிடப்பான் என்றும் இனி அவன் உயிருடன் கிடைக்கமாட்டான் என்றுமே தனக்கு தோன்றியதாக கூறுகிறார் Dominic Peake.

சற்று நேரத்தில் பொலிசார் வர, அவர்கள் கண்களில் Dominic Peakeஇன் நாயின் காலடித் தடங்கள் கண்ணில் பட, அதைப் பின்பற்றி சென்றனர்.

அரை மைல் தொலைவில் தனது குட்டி எஜமானுடன் அப்பொல்லோ என்று அழைக்கப்படும் அந்த நாய் இருப்பதைக் கண்டனர் பொலிசார்.

சமபவம் குறித்து ஷெரிஃப் Daniel Abbott கூறும்போது, அந்த நாயின் காலடித்தடங்கள் இல்லாமல் இருந்திருந்தால் அந்தக் காட்டில் குழந்தை போன பாதையை கண்டுபிடித்திருக்க முடியாது என்றும், அது மட்டுமின்றி அந்த நாயின் அருகாமைதான் குழந்தையின் உயிரைக் காத்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

குழந்தையின் உடலில் சிறு கீறல்களும், பூச்சிகள் கடித்ததால் சில தடிப்புகளுமே இருந்தன என்றும் மற்றபடி அவன் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவித்தனர்.

காணாமல்போய் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குழந்தையைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக இருந்த அப்போல்லோவுக்கு பொலிசார் தங்கள் சார்பில் உணவை பரிசாக அளித்தனர்.

என் மகனின் உயிரைக் காத்ததற்காக அப்பொல்லோவுக்கு கடமைப் பட்டிருக்கிறேன் என்று கூறியதோடு என் மகன் தனியாக இருந்தால் அவனுக்கு என்ன நேரிட்டிருக்கும் என்றே எண்ணிப்பார்க்க முடியவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் Dominic Peake.