வவுனியாவில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு!!

386


வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் ஐந்து மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்று (23.06) குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இவ் இலவச கருத்தரங்கானது மக்கள் வங்கியின் வவுனியா கிளையின் முகாமையாளர் திருமதி எஸ்.பாலச்சந்திரனின் அனுசரணையுடன் நடைபெற்றது.



கருத்தரங்கின் வளவாளராக வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் அ.பாலசுந்தரம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

பூந்தோட்டம், பாரதிபுரம், வெளிக்குளம், அண்ணாநகர், கோவில்குளம், தாண்டிக்குளம், மகாறம்பைக்குளம் பிரதேச பாடசாலைகளை சேர்ந்த 250 மாணவர்கள் இவ் இலவச கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தனர்.



வவுனியா வடக்கு மற்றும் தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ந்தும் இலவசக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதால் புலைமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தவறாது சமூமளிக்கும்படி மக்கள் வங்கியின் வவுனியா கிளை முகாமையாளர் தெரிவித்திருந்தார்.