கணவருடன் சேர்ந்து மது போதையில் மிதந்த மனைவி : அடுத்து நிகழ்ந்த சோகம்!!

294

பிரித்தானியாவை சேர்ந்த பெண் கணவருடன் சேர்ந்து மது அருந்திய போது உயிரிழந்த நிலையில், கணவர் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டரை சேர்ந்தவர் ஸ்டுஅர்ட் பிஷப் (46). இவர் மனைவி பவுலா (37). இருவரும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் இருந்த இரண்டு மது கூடங்களில் பிஷப்பும், பவுலாவும் மது அருந்திய பின்னர் ஹொட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர்.

பின்னர் காலையில் பிஷப் எழுந்து பார்த்த போது பவுலா சடலமாக கிடந்துள்ளார்.

பவுலாவின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் அதிகளவு மது குடித்ததால் அந்த நச்சு உடலில் கலந்து இதயம் செயலிந்து உயிர் பிரிந்தது தெரியவந்தது.

இது குறித்து பிஷப் கூறுகையில், பவுலா கொஞ்சம் பீர் வகை மற்றும் இரண்டு கிளாஸ் வைன் மது மற்றும் ஐரீஸ் காபியை தான் குடித்தார்.

ஆனால் அவர் ரத்தத்தில் 15 யூனிட் அளவில் மது இருப்பது தெரியவந்தது, இதை என்னால் நம்ப முடியவில்லை. நான் எல்லோருக்கும் கூறுவது ஒன்று தான், வேறு நாடுகளுக்கு போனால் மது விடயத்தில் கவனமாக இருங்கள்.

ஏனெனில் பிரித்தானியா போல மதுவின் அளவு பல நாடுகளிலும் சரியான அளவு கணக்கிடப்படுவதில்லை.

என் மனைவியை நான் அதிகம் மிஸ் செய்கிறேன், அவரில்லாமல் வாழ்வது கடினமாக உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.