காணாமல் போன 3 மணி நேரத்தில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம் : அதிர்ச்சி சம்பவம்!!

467

காணமல் போனதாக கருதப்பட்ட சிறுமி மூன்று மணி நேரத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Rothesay மாகாணத்தைச் சேர்ந்த Alesha MacPhail என்ற 6 வயது சிறுமி உள்ளூர் நேரப்படி காலை 06. 30 மணிக்கு காணமல் போயுள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் பொலிசாரிடம் புகார் அளித்த பின் அந்த சிறுமியின் மூதாட்டி Angela King(46) என் பேத்தியை காணவில்லை, யாரேனும் எங்கு கண்டிருந்தால் எனக்கு உடனடியாக தெரிவியுங்கள் என்று சிறுமியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அப்பகுதி மக்கள் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது சரியாக காலை 9 மணியாளவில் Ardberg சாலையில் அமைந்திருக்கும் வெகுநாட்களாக பயன்படுத்தப்படாத ஹோட்டலான Cames Hydro ஹோட்டலுக்கு வெளியில் சிறுமியின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, சிறுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். காணமல் போன மூன்று மணி நேரத்திற்குள்ளே சிறுமியின் மரண செய்தி அவரின் பாட்டிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதன் பின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சிறுமி மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சிறுமியின் மரணம் மர்மமாக உள்ளது. விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தை எட்டியுள்ளதால் இது குறித்த முழு விசாரணைக்கு பின்னரே உரிய தகவல் தெரிய வரும்.

மேலும் 06.30 மணிக்கு மேல் இந்த சிறுமியை யாரேனும் எங்காவது பார்த்திருந்தால் அதைப் பற்றி தகவல் கொடுக்கவும், ஏனெனில் அங்கு இருக்கும் சிசிடிவி கமெராக்களை வைத்து சில விடயங்களை கண்டுபிடிக்க முடியும், இதை வைத்து பொலிசார் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.

இது மிகவும் அரிதான சம்பவம், இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும், ஆதால் பொதுமக்கள் இதைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.