தன்னுயிரைக் கொடுத்து 37 பேரின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர்!!

797


 

சீனாவில் மலைப்பிரதேச சாலை ஒன்றில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தனது உயிரைக் கொடுத்து 37 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.



சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள Xichang-ல் இருந்து Ya’an பகுதிக்கு 37 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

மலைப்பாதை என்பதால் அனுபவம் மிக்க ஓட்டுனர்களே பெரும்பாலும் அந்த சாலை வழியாக பேருந்துகளை இயக்கி வந்துள்ளனர். மட்டுமின்றி மலைப்பாதையின் ஒருபக்கம் பள்ளம் என்பதாலும் மிக கவனமாகவே வாகனங்கள் செலுத்தப்பட்டு வந்துள்ளது.



இந்த நிலையில் ஓட்டுனர் Zhao மற்றும் அவரது துணை ஓட்டுனர் Chen Yong ஆகிய இருவரும் 35 பயணிகளுடன் அந்த மலைப்பாதை வழியாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென்று மிகப்பெரிய பாறை ஒன்று பெயர்ந்து விழுவதை ஓட்டுனர் Zhao கண்டுள்ளார்.



இதனையடுத்து உடனடியாக பேருந்தை நிறுத்திய அவர் மீது அந்த பாறை விழுந்து மோதியுள்ளது.இதில் சம்பவயிடத்திலேயே ஓட்டுனர் Zhao கொல்லப்பட்டார். ஆனால் எஞ்சிய 37 பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர்.


அதில் 6 பேருக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர் Zhao மட்டும் இல்லை என்றால் பேருந்து பாறையில் சிக்கியிருக்கும் அல்லது பள்ளத்தில் கவிழ்ந்திருக்கும் என அதிர்ச்சியில் இருந்து மீளாத பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் பயணிகளை மீட்டுள்ளதுடன் கொல்லப்பட்ட ஓட்டுனரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.