எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஹீரோ நாய்!!

400

அமெரிக்காவின் அரிசோனாவில் எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஒரு நாய் ஒரே நாளில் ஹீரோவாகியிருக்கிறது.

அரிசோனாவைச் சேர்ந்த Paula Godwin தனது நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது காலருகே ஒரு பாம்பு கிடப்பதைக் கண்டார். அது rattlesnake எனப்படும் ஒரு வகை பாம்பு.

பொதுவாக இவ்வகைப் பாம்புகள் தங்கள் வாலிலுள்ள கிலுகிலுப்பை போன்ற அமைப்பு மூலம் ஒலி எழுப்பி எதிரிகளை எச்சரிக்கும்.

ஆனால் சம்பவம் நடந்த அன்று அந்த பாம்பு ஒலி எதுவும் எழுப்பாததோடு சாலையின் நிறத்திலேயே இருந்ததால் அது படுத்துக் கிடந்ததையே Paula Godwin கவனிக்கவில்லை.

திடீரென எழுந்த அந்த பாம்பு Paula Godwinயைக் கொத்தும்போது அவரது காலை ஒட்டி நின்ற அவரது நாய்களில் ஒன்றான Todd மீது கடிபட்டது. அது இல்லை என்றால் Paula Godwin மீது கடிபட்டிருக்கும்.

Todd குறுக்கே வந்ததால் அதன் மீது பாம்பு கொத்த Paula உயிர் தப்பினார். உடனடியாக Paula தனது நாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அதற்கு பாம்பு கடிக்கான எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டது. என்றாலும் அதன் முகம் வீங்கிவிட்டது.

முகம் வீங்கிய Toddஇன் படத்தை Paula பேஸ்புக்கில் பதிவிட ஒரே நாளில் அது ஹீரோவாகிவிட்டது. Todd ஒரு சாதாரண நாய் போல் நடந்து கொள்கிறது, ஆனால் அதுதான் என் ஹீரோ என்கிறார் Paula.