வவுனியாவில்  மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி!!

586


வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலய மாணவர்களினால் இன்று (06.07.2018) காலை 7.30 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது.

வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாக விழிப்புணர்வுப் பேரணியானது மன்னார் வீதியூடாக பட்டானிச்சூர் 5ம் ஒழுங்கையடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக குருமன்காடு சந்தியடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக பாடசாலையை சென்றடைந்தது.



இப் பேரணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , 500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.