வவுனியா மாவட்டத்தின் 37வது அரசாங்க அதிபராக இன்று காலை(06.07) 11.30 மணியளவில் ஜ.எம்.ஹனிபா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வு இன்று காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரன பத்திரன தலைமையில் இடம்பெற்றது.
காலை 11 மணியளவில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு சர்வமத பிரார்த்தனையின் பின்னர் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக மாவட்ட செலயகத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தனது குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் வரவேற்றுள்ளதுடன் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.