பில்லி சூனியம் வைத்து தனது சொந்த வீட்டை அபரிக்க முயற்சிப்பதாக நடிகை ஜெயசித்ரா பொலிசில் புகார் அளித்துள்ளார்
ரங்கராஜபுரத்தில் உள்ள எனது சொந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளமுருகன் மற்றும் அவரது மனைவி மீனா ஆகியோர் வாடகை தராமல் ஏமாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி போலி ஆவணங்கள் மற்றும் பில்லி சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இளமுருகன் – மீனா தம்பதியினர் நடிகர் விக்னேஷிடம் ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பித்தராமல் இருந்ததாக கூறியுள்ளார்.
மேலும் படத்தயாரிப்பாளர் அசோக் லோடா என்பவரிடம் கார் வாங்கித் தருவதாக கூறி ரூ.7.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு பின்பு பணத்தை தராமல் ஏமாற்றியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.