4000 தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் இந்தியா!!

300

தமிழகத்தில் தங்கியுள்ள 4000 இலங்கை தமிழ் அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அகதிகளை மீளவும் திருப்பி அனுப்புமாறு கோரி அனுப்பிய கடிதத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதன்படி, முதற்கட்டமாக 4000 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு, இந்திய அரசாங்கம் தகவலை அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாடு திரும்பும் அகதிகளை மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக“ அவர், தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார்.