மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இலகு ரயில் சேவை ஒன்று மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகி உள்ளன. ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் இந்த இலகு ரயில் வீதி பத்தரமுல்லை, ராஜகிரிய, பொரளை, கண் வைத்தியசாலை மற்றும் காமினி ஹோல் ஊடாக பயணிக்கவுள்ளது.
கொழும்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஊடாக பொது போக்குவரத்து சேவை பயன்படுத்துபவர்கள் நூற்றுக்கு 60 வீதம் வரை அதிகரிப்பதற்கு மாநகரம் மற்றும் மேல்மாகாண சபை அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரை அல்லது மாலபேயில் இருந்து கொள்ளுப்பிட்டி வரை செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.
வேலைத்திட்டம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.