பேஸ்புக் நண்பர் கொடுத்த தொல்லை : இளம் திருநங்கை எஸ்.ஐ செய்த செயலால் பரபரப்பு!!

438

பேஸ்புக் மூலமாக நண்பரான ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான பிரித்திகா யாஷினி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக் மூலமாக ஜனார்த்தனன் என்பவர் அறிமுகமானதாகவும், சில காலம் அவருடன் நட்பாக பழகி வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் ஜனார்த்தனன் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரித்திகா கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பான நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் ஜனார்த்தனனை நேரில் அழைத்து விசாரித்தனர்.

இதனைத்தொடர்ந்து பிரித்திகாவுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டனர்.

எஸ்.ஐ. ஒருவரே பாதுகாப்பு கேட்டு பொலிசிடம் புகார் அளித்தது பொலிஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.