சென்னையில் கல்லூரி மாணவியை கத்தியால் முயன்ற உடற்பயிற்சி ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
சென்னை கல்லூரியில் பயிலும் மாணவி சுமதியிடம், `நீ ஏன் வெறுக்கிறாய்’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார் மதன். உடற்பயிற்சி மையம் வைத்திருக்கும் மதனுக்கும், கல்லூரி மாணவி சுமதியும் காதலித்து வந்துள்ளனர். இடையில் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதால் சுமதி, மதனை சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுமதி படிக்கும் கல்லூரிக்கு கத்தியுடன் நுழைந்த மதன், நீ ஏன் என்னை வெறுக்கிறாய்?’ மதன் கேட்டுள்ளார். அதற்கு ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சுமதி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதன், சுமதியை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
அப்போது சக மாணவர்கள் சுமதியை மதனிடமிருந்து காப்பாற்றினர். பிறகு, மதனை அண்ணா சதுக்கம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.