பலரும் அறியாத கமல்ஹாசன் மனைவி நடிகை சரிகாவின் சோகக்கதை!!

388


நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான சரிகாவின் வாழ்க்கை பாதை சோகமான பின்னணியை கொண்டது.



டெல்லியில் பிறந்த இவர் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். சரிகாவின் இளம்வயதிலேயே அவரது தந்தை குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது இதனால் இவர் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இவர் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை.



தனது குடும்ப வறுமையை போக்க 4 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்துவைத்தார். சிறுவயதில் இவரது வருமானத்தை நம்பியே இவரது குடும்பம் இருந்தது. அந்த அளவுக்கு குடும்பத்தின் சுமை இவரது தோள்மீது விழுந்தது.



அதுமட்டுமின்றி இவர் தனது தாயால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். சிறுவயதில் தனது தாயால் அனுபவித்த கொடுமைகள் அவர் இறந்துபின்னரும் தொடர்ந்தது என்பதற்கு சமீபத்தில் வசிப்பதற்கு வீடு இல்லாமல் சரிகா இருந்தது விடயத்தில நிரூபணமானது.


இவரின் தாயார் இவரிடம் கடுமையாக வேலைவாங்கினார். இவர் தன் வாழ்வில் உச்சநிலையில் இருந்தபோது, இவரது தாயாரால் பொது இடத்தில் தாக்கப்பட்டார்.

சரிகாவின் படிப்பிற்கு அவரது தாயே இடையூறாக இருந்துள்ளார், தனது தாயிடம் அவர் அதிக கொடுமைகளை அனுபவித்த காரணத்தால் அவரை விட்டு பிரிந்து தனியாக வசிக்க ஆரம்பித்தார்.


இந்த சமயத்தில் தான் தென் இந்திய சினிமாவில் கலக்கிவந்த கமலுடன் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். ஏனெனில் கமல் மேற்கத்திய கலாசாரத்தை விரும்புபவர்.

கமல்ஹாசனை காதலிப்பதற்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவன் கபில் தேவை சரிகா காதலித்துள்ளார். ஆனால், கபில் தேவ் வேறு ஒரு பெண்ணை காதலித்த காரணத்தால் சரிகா, அதிலிருந்து ஒதுங்கிகொண்டார்.

இதன்பின்னர் கமலுடன் காதல் வயப்பட்ட இவர், 1988 ஆம் ஆண்டில் கமலை திருமணம் செய்துகொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு இவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

விவாகரத்து பெறவிருக்கும் போது சரிகா தற்கொலைக்கு முயற்சித்தார் என கூறப்படுகிறது. தற்கொலை முயற்சியின் போது பலத்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார் சரிகா.


கமலின் பிரிவுக்கு பிறகு, மும்பையில் தனது தாயுடன் வசித்து வந்தார் சரிகா. இதற்கிடையில் சரிகாவின் தாய் இறந்துபோனபோது, அவர் வாங்கிய மும்பையின் ஜூஹூ பகுதில் உள்ள குடியிருப்பை அவரது உறவினர்களுக்கு எழுதி வைத்து இறந்துவிட்டார்.

அந்த குடியிருப்பு சரிகாவின் சம்பளத்தில் வாங்கியது. இதனை மீட்க கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற வாசலில் ஏறி இறங்கி வருகிறார். இன்னும் வழக்கு முடியவில்லை.

இந்த நிலையில் தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்து வரும் அவருக்கு பாலிவுட் நடிகர் ஆமிர் கான் உதவியுள்ளார்.

சரிகாவும் நடிகர் இம்ரானின் அம்மாவும் நல்ல நண்பர்கள், அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் சரிகாவிற்கு அமீர்கான் உதவியுள்ளார்.

சரிகாவை அவரது இரண்டு மகள்களான ஸ்ருதியும், அக்ஷராவும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.