வவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி 970 கிராம் ஹெரோயினுடன் கைது!!

333

வவுனியாவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை சென்ற புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை ஹெரோயினுடன் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம் பகுதியில் ஹெரோயின் கஞ்சா வியாபாரி நடவடிக்கைகள் அதிகளவில் காணப்படுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரி ஒருவர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்துறையினருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து திடீரென்று மேற்கொண்ட நடவடிக்கையின்போது பிற்பகல் 4 மணியளவில் 34 வயதுடையபிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை 970கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.