முல்லைத்தீவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு!!

297


முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் பகுதிகளில் புதியவகை மலேரியா நோய்காவி (டிபன்சி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்தினால், இந்த புதிய மலேரியா நோய்க்காவி பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என அறிவிக்கப்பட்டுள்ளது.



அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் மலேரிய தடுப்பு இயக்கம் செயற்படவுள்ளது என மலேரியா தடுப்பு பூச்சியியல் ஆய்வு பிரிவு அதிகரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மலேரியா தடுப்பு இயக்கம் தெரிவிக்கையில்,

கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கிணறுகளில் கப்பீஸ் இன மீன்களை விட்டு டிபன்சி வைரசை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு கப்பீஸ் இன மீன்களை கிணறுகளில் விடுவதன் மூலம் அவை நோய் காவிகளை இரையாக்கி நோய்க் காவிகளை அழிக்கும்.



இதன்படி இன்று கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் பகுதிகளில் பொதுமக்களின் கிணறுகளில் மலேரிய தடுப்பு இயக்கப் பணியாளர்கள் மீன்களை விடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.