இலங்கையில் அரச பணியாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

381

இலங்கையில் அரச பணியில் இணைக்கப்பட்டுள்ளவர்களில் 17 வீதமானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, அரச பணியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஆண்களில் 27.2 வீதமானவர்களும், பெண்களில் 4.8 வீதமானவர்களும் க.பொ.த.சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி நிலவரப்படி, மேற்படி அரச துறைகளில் 1,109,475 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 55.1 வீதமானவர்கள் ஆண்கள். 44.9 வீதமானவர்கள் பெண்கள்.

இந்த ஆய்வுகளின்படி, 35 வீதமானவர்கள் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 26.1 வீதமானவர்கள் பட்டம் பெற்றவர்களாக அல்லது உயர் கல்வி பெற்றவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரச பணியில் இணைக்கப்பட்டுள்ளவர்களில் 17 வீதமானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.