பெற்ற மகளுக்காக இயக்குனரின் பாலியல் தொல்லையை பொறுத்து கொண்ட பிரபல நடிகை!!

511

மலையாள தொலைக்காட்சி இயக்குனரின் பாலியல் தொல்லை பற்றி நடிகை ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர் உப்பும் மொளகும். இந்த தொடரில் ஐந்து குழந்தைகளுக்கு தாயாக நடித்தவர் நிஷா சாரங். இவர் 650 தொடருக்கும் மேலாக இந்த சீரியலில் நடித்து வருகிறார்

இந்த தொடரின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார் நிஷா. இயக்குனர் உன்னி கிருஷ்ணன் நெடுங்காலமாகவே தனக்கு தொல்லைகள் தந்து வந்ததாக கூறும் நிஷா தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அவரை தொல்லை செய்ததை நிறுத்தவில்லை என்கிறார்.

மேலும் தான் நினைத்ததை அடைய முடியவில்லை என்பதால் ஆத்திரத்தில் பலமுறை உன்னி கிருஷ்ணன் நிஷாவை செட்டில் அவமானப்படுத்தியிருக்கிறார். மேலும் தொலைபேசியிலும் ஆபாசமாக திட்டி குறுஞ்செய்தி அனுப்புவாராம்.

தினமும் குடித்து விட்டு செட்டுக்கு வரும் உன்னி கிருஷ்ணன் இவரிடம் மோசமாகவே நடந்ததாக நடிகை புகார் அளித்துள்ளார்.

மேலும் மகளின் திருமணத்திற்காக அத்தனை அவமானத்தையும் பொறுத்து கொண்டதாகவும் இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாமல் புகார் அளித்ததாக கூறியிருக்கிறார்.