தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்ற தனது உயிரைவிட்ட அண்ணன் : அதிர்ச்சி சம்பவம்!!

342

அவுஸ்திரேலியாவில் தந்தையிடம் இருந்து தங்கையின் உயிரை காப்பாற்ற அண்ணன் முயன்ற நிலையில் இருவரும் தந்தையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னியை சேர்ந்த ஜான் எட்வேர்ட்ஸ் (68) என்ற நபர் தனது மனைவி ஒலகா மற்றும் இரு பிள்ளைகளான ஜாக் (15), ஜெனீபர் (13) ஆகிய இருவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஒலகா வீட்டுக்கு கைத்துப்பாக்கியுடன் ஜான் வந்தார். அங்கிருந்த ஜெனீபரை முதலில் அவர் சுட முயன்ற நிலையில் அதை தடுக்க முயன்ற ஜாக் தந்தையுடன் போராடியுள்ளான்.

ஆனாலும் ஜெனீபரை சுட்ட ஜான், பின்னர் ஜாக்கையும் சுட்டு கொன்றார்.

மனைவி மீது இருந்த கோபத்திலேயே இச்செயலை ஜான் செய்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இரு பிள்ளைகளை சுட்டுகொன்ற ஜானுக்கு அந்த கொலையை செய்வதற்கான துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஜோன் எட்வேர்ட்ஸ் இரண்டு துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததும் அதில் ஒன்றை கொலைக்கு பயன்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், ராணுவ வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஜானுக்கு எவ்வாறு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.