எங்களுக்கும் குடும்பம் உள்ளது : 3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை பேட்டி!!

448

தவறான மெசேஜ்களைப் பார்த்து அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டாம் என்று நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகையான ஜெயலட்சுமிக்கு வாட்ச் அப்பில் பாலியல் தொழில் செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஒரு மெசேஜ் வந்தது.

இது குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் கவியரசன், முருகப்பெருமாள் ஆகிய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய ஜெயலட்சுமி, இவ்வளவு தைரியமாக மெசேஜ் அனுப்பியவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை.

நான் கொடுத்த புகாரின் பேரில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கிறது. நடிப்பு என்பது எங்களுடைய தொழில் மட்டும்தான். சாதாரண மக்களைப் போல போராட்டமும் இருக்கிறது.

எல்லா நடிகைகளையும் ஒரே மாதிரியாக சிலர் பார்க்கின்றனர். எனவே நடிகைகளே, இந்தப் பிரச்னைகளுக்கு இனி அமைதியாக இருக்காதீர்கள்

நமக்கு உதவிசெய்ய பொலிஸ், நண்பர்கள் இருக்கிறார்கள். நடிப்பு என்பது நமக்குத் தொழில் என்பதை சமுதாயத்துக்குத் தெரியப்படுத்துவோம்.

எல்லா நடிகர்கள், நடிகைகள் சொகுசாக வாழவில்லை. எனக்கு நடிப்பு மூலம் போதிய வருமானம் இல்லை என்பதால் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக உள்ளேன். அதோடு, ஜூனியர் அட்வகேட்டாகவும் பணியாற்றுகிறேன் என கூறியுள்ளார்.