திருமணமான 13 நாளில் புதுப்பெண் பலி : கணவர் கண்முன்னே நடந்த சோகம்!!

355

தமிழகத்தில் கடையநல்லூர் அருகே பேருந்து- மோட்டார் சைக்கிளுடன் மோதிக் கொண்ட விபத்தில் அண்ணன்- தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் செல்வராஜ், சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் இவருக்கும், ஹேமலதா என்பவருக்கு கடந்த 1ம் திகதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் புதுமண தம்பதியினர் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் இலத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்.

இவர்களுடன் ஹேமலதாவின் தந்தை மற்றும் அண்ணனும் சென்றனர், கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது மங்களாபுரம் விலக்கு அருகே எதிரே வந்த அரசு பேருந்துடன் பைக் மோதியது.

இதில் ஹேமலதா மற்றும் அவரது அண்ணன் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர், தங்கள் கண்முன்னே நடந்த விபத்தை பார்த்து செல்வராஜ் மற்றும் ஹேமலதாவின் தந்தை கதறி அழுதனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், இருவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.