வவுனியாவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

425

வவுனியா உக்குளாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16.07.2018) அதிகாலை 4 மணியளவில் 19 வயதுடைய உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் குறித்த மாணவி வீட்டாருடன் முன்னர் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக அனுகியுள்ளார் (கவலையடைந்த நிலையில்).

இந் நிலையில் நேற்றிரவு வீட்டில் தனியறையில் உறங்கியுள்ளார். வழமை போன்று தங்கையை எழுப்புவதற்கு இன்று அதிகாலை சகோதரன் அறைக்கு சென்ற சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.